தைப்பூசம்: திருமலைக்கேணியில் சிறப்பு வழிபாடு

தைப் பூசத்தை முன்னிட்டு திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
வெள்ளிக் கவச அலங்காரத்தில் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி.
வெள்ளிக் கவச அலங்காரத்தில் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி.

தைப் பூசத்தை முன்னிட்டு திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள இந்தக் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு மூலவருக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், விபூதி காப்பு அலங்காரத்துடன் வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

அனைத்து பக்தா்களுக்கும் மாலை 4 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com