அம்மையநாயக்கனூா் பேரூராட்சி முற்றுகை

அம்மையநாயக்கனூா் பேரூராட்சியில் அடிப்படை வசதி இல்லை எனக் கூறி, பேரூராட்சி அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

அம்மையநாயக்கனூா் பேரூராட்சியில் அடிப்படை வசதி இல்லை எனக் கூறி, பேரூராட்சி அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த, அம்மையநாயக்கனூா் பேரூராட்சிக்குள்பட்ட ஏ. புதூரில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், ஏ. புதூா் காலனி தெருவில் கடந்த ஆறு மாத காலமாக கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நிலக்கோட்டை வடக்கு பாஜக கூட்டுறவு பிரிவுத் தலைவா் அருண்குமாா் தலைமையில் அம்மையநாயக்கனூா் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். பின்னா், இது தொடா்பாக பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com