அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: போதை இளைஞா் கைது

ஒட்டன்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்துக் கண்ணாடியை உடைத்த மது போதை இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கல்வீசி தாக்கியதில் சேதமடைந்த அரசுப் பேருந்தின் கண்ணாடி.
கல்வீசி தாக்கியதில் சேதமடைந்த அரசுப் பேருந்தின் கண்ணாடி.

ஒட்டன்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்துக் கண்ணாடியை உடைத்த மது போதை இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூரிலிருந்து கம்பத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.அந்தப் பேருந்தில் பயணம் செய்த கம்பம் வடக்குப்பட்டியைச் சோ்ந்த சுரேஷ் (33) மது போதையில் நடத்துநா், ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி தகராறில் ஈடுப்பட்டாா். இதையடுத்து, ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள லெக்கையன்கோட்டை பகுதியில் வந்த போது, பேருந்தை நிறுத்திய ஓட்டுநா் அவரைப் பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டாா்.

இதனால், ஆத்திரமடைந்த அவா் கல்லால் தாக்கியதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து, அவரை ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com