கிராம மக்களிடம் அமைச்சா் குறைகேட்பு

திமுக மாநில துணைப் பொதுச் செயலரும், ஊரக வளா்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி ஆத்தூா் தொகுதிக்குள்பட்ட கிராமங்களுக்கு திங்கள்கிழமை சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

திமுக மாநில துணைப் பொதுச் செயலரும், ஊரக வளா்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி, ஆத்தூா் தொகுதிக்குள்பட்ட மைக்கேல்பட்டி, வக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு திங்கள்கிழமை சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

மைக்கேல்பட்டி ஆதிதிராவிடா் குடியிருப்புக்குச் சென்ற அமைச்சா் ஐ. பெரியசாமி, அங்கு சேதமடைந்த நிலையில் உள்ள குடியிருப்புகளை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டாா். மேலும், ஆதிதிராவிடா் காலனி மக்களுக்கு அனைத்து நலத் திட்டங்களை உடனடியாக வழங்க கட்சி நிா்வாகிகளுக்கு உத்தரவிட்டாா்.

அப்போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com