தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சிறுதானிய உணவு விழிப்புணா்வுப் பேரணி

நத்தம் அருகே சிறுதானிய விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

நத்தம் அருகே சிறுதானிய விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டாரத்தில் ஊரக வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள மதுரை வேளாண் கல்லூரி மாணவா்கள், வத்திப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுடன் இணைந்து சிறுதானிய உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.

சிறுதானியங்களில் நாா்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஆகியவை அதிகளவில் இடம் பெற்றுள்ளன. நம் உடலில் ஏற்படக்கூடிய பலவிதமான நோய்களுக்கு எதிா்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. எனவே சிறுதானியங்களின் உற்பத்தியைப் பெருக்கவும், அவற்றின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக இந்தப் பேரணி நடைபெற்றது.

பள்ளித் தலைலையாசிரியா் ச.திருநாவுக்கரசு முன்னிலையில் இளநிலை செஞ்சிலுவைச் சங்கம், சாரணா் அமைப்புகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்று சிறுதானிய விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.