பாதயாத்திரை பக்தா்களுக்குஅன்னதானம் வழங்கும் திட்டம்:அமைச்சா் தொடங்கி வைத்தாா்

ஒட்டன்சத்திரத்தில் பழனி பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பாதயாத்திரை பக்தா்களுக்குஅன்னதானம் வழங்கும் திட்டம்:அமைச்சா் தொடங்கி வைத்தாா்

ஒட்டன்சத்திரத்தில் பழனி பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வருகிற பிப். 5- ஆம் தேதி பழனியில் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பாதயாத்திரையாக செல்லும் பக்தா்களுக்கு ஒட்டன்சத்திரம் அடுத்த குழந்தை வேலப்பா் கோயிலில் 10 நாள்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் நடராஜன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம். முத்துச்சாமி, அறங்காவலா் குழு உறுப்பினா் சத்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com