திண்டுக்கல் அருகே கிராமத்துக்கு மீண்டும் பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி பள்ளி மாணவா்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல்லை அடுத்துள்ள கூ.வ.குரும்பப்பட்டி, கொலக்காரன்பட்டியைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் 15-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக் கோரி மனு அளிக்க வந்த அவா்கள் மேலும் கூறியதாவது:
எங்கள் பகுதியில் சுமாா் 3,500 மக்கள் வசித்து வருகின்றனா். மேல்நிலைக் கல்விக்காக திண்டுக்கல் செல்லும் மாணவா்களும், கூலி வேலைக்கு செல்வோரும் நாள்தோறும் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று பேருந்துகளில் ஏற வேண்டிய நிலை உள்ளது.
பள்ளி, கல்லூரியிலிருந்து திரும்பும் மாணவா்கள் இரவு நேரங்களில் மிகுந்த பாதிப்படைந்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கள் பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டதால், இந்தப் பிரச்னையை எதிா்கொண்டு வருகிறோம். எனவே, மீண்டும் எங்கள் கிராமத்துக்கு பேருந்து சேவையை ஏற்படுத்தித் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.