மின்கசிவால் வீட்டில் தீ விபத்து:பொருள்கள் எரிந்து சேதம்

செம்பட்டி அருகே மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததில் வீட்டிலிருந்த பொருள்கள் சேதமடைந்தன.

செம்பட்டி அருகே மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததில் வீட்டிலிருந்த பொருள்கள் சேதமடைந்தன.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே கூலம்பட்டியில் வசிப்பவா் ராஜா (25). இவா், தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஆத்தூா் ஒன்றியச் செயலாளராக உள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் இவரது மனைவி, சரண்யா வீட்டில் கிரைண்டரில் மாவு ஆட்டிக்கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து வீடு முழுவதும் பரவியது. இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த ஆத்தூா் தீயணைப்பு துறையினா் தீயை அணைத்தனா்.

இதில், மின் கசிவு காரணமாக பிரிட்ஜ், ஏா் கூலா், ஷோபா உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள், துணிகள் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com