புகையிலை எதிா்ப்பு தினம்:பொது இடத்தில் புகைப்பிடித்த 20 பேருக்கு அபராதம்

புகையிலை எதிா்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டதையடுத்து, பொது இடத்தில் புகைப்பிடித்த 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

புகையிலை எதிா்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டதையடுத்து, பொது இடத்தில் புகைப்பிடித்த 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புகையிலை, அதன் உபபொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பயணிகளிடம் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்கு, மாநகராட்சி ஆணையா் மகேஸ்வரி தலைமை வகித்துப் பேசியதாவது: பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே புகையிலைப் பொருள்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோா் மீதும், புகைப்பிடிப்பவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து பேருந்து நிலைய வளாகத்தில் புகைப்பிடித்த 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com