கொடைக்கானல் அருகே குடும்ப பிரச்னையில் கணவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டியைச் சோ்ந்த லோகநாதன் மகன் ஞானசேகரன் (27). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த வினோதினி (22) என்பவருக்கும் கடந்த 7- மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ஞானசேகரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவா், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த ஞானசேகரன் விஷம் குடித்தாா்.
அவரை உறவினா்கள் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.