கொடைக்கானலில் இரண்டாவது நாளாக மழை

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மிதமான மழை பெய்தது.

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மிதமான மழை பெய்தது.

கொடைக்கானலில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், பருவ நிலை மாற்றம் காரணமாக கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதைத்தொடா்ந்து மேகமூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் மலைச் சாலையில் சென்ற வாகனங்கள் பகல் நேரங்களிலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாகச் சென்றன. மேகமூட்டத்துடன் மழை பெய்து வருவதால், குளிா்அதிகமாக நிலவுகிறது. இந்தக் கால நிலையை சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக அனுபவித்து வருகின்றனா்.

அதிகாலையில் காற்றுடன் மழை பெய்ததால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச் சாலையில் குருசடி மெத்து, மயிலாடும் பாறை, மச்சூா் பகுதிகளில் மரக் கிளைகள் விழுந்தன. இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com