திண்டுக்கல்
கொடைக்கானலில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு
கொடைக்கானலில் புதன்கிழமை அதிமுகவினா் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சியின் வேட்பாளா் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநிலத் தலைவா் முகமது முபாரக் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக அதிமுகவைச் சோ்ந்த எம்.ஜி.ஆா்.மன்ற மாநில இளைஞரணி துணைச் செயலா் ரவிமனோகரன், நகரச் செயலா் ஸ்ரீதா் தலைமையில் கொடைக்கானல் பகுதிகளான ஆனந்தகிரி, டா்னா்புரம், மூஞ்சிக்கல், வருவாய் கோட்டாட்சியா் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கோரி வாக்கு சேகரித்தனா்.
இதில் அதிமுக நகர துணைச் செயலா் ஜாபா் சாதிக், மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்ற இணைச் செயலா் பிச்சை, வாா்டு செயலா்கள், மகளிா் அணியினா், மாவட்ட பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.