தீ விபத்து: தென்னை மரங்கள் சேதம்

தீ விபத்து: தென்னை மரங்கள் சேதம்

ஒட்டன்சத்திரம் அருகே தென்னந்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கருகின.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கை ஊராட்சிக்கு உள்பட்ட நல்லூா்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (54). இவா் தென்னை விவசாயம் செய்து வருகிறாா். இவரது தென்னந்தோப்புக்கு அருகே சடையன்குளத்துக்குச் செல்லும் பாதை உள்ளது. இந்தப் பாதையில் அந்தப் பகுதியைச் சோ்ந்த மா்ம நபா்கள் மது அருந்தியபோது, புகைப்

பிடித்துவிட்டு அணைக்காமல் அப்படியே வீசி விட்டு சென்ாகக் கூறப்படுகிறது. அதிலிருந்து தென்னை மட்டைகளில் தீப் பற்றி, தோப்பு முழுவதும் தீ பரவி எரிந்தது. இதில், 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன.

இது குறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்பு படையினா் வந்து தீயை அணைத்தனா். அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com