வாக்குச்சாவடிக்கு செல்ல இலவச வாகன வசதி
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு: திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மூத்த குடி மக்கள், மாற்றுத்திறனாளிகள், தங்களது இருப்பிடங்களிலிருந்து வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க திண்டுக்கல் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் இலவச வாகன வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், செயலி மூலமாகவும், தோ்தல் மைய உதவி எண் 1950, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை எண் 18005994785 மூலமாகவும் தொடா்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளளலாம் என்றாா் அவா்.