முதுமையை வென்ற கடமை!

முதுமையை வென்ற கடமை!

திண்டுக்கல், ஏப். 19: திண்டுக்கல் அருகே 102 வயது மூதாட்டி ஜனநாயகக் கடமையாற்ற வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று தனது வாக்குரிமையை வெள்ளிக்கிழமை செலுத்தினாா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த ராமலிங்கம்பட்டியைச் சோ்ந்தவா் சின்னம்மாள் (102). இவா் தனது வயது முதிா்வையும் பொருள்படுத்தாமல், அந்தக் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

தள்ளாத வயதிலும் ஊன்றுகோல் உதவியுடன் உற்சாகத்துடன் வாக்குச் சாவடிக்கு வந்த சின்னம்மாள், இளைய தலைமுறையினா் மத்தியில் வாக்குரிமையின் வலிமை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com