ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

ஒட்டன்சத்திரத்தில் ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் மாலை 6 மணி மேலும் வாக்குப்பதிவு நீடித்தது.

ஒட்டன்சத்திரத்தில் ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் மாலை 6 மணி மேலும் வாக்குப்பதிவு நீடித்தது.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி, ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. எனினும், வெயிலின் தாக்கம் காரணமாக பிற்பகல் வரை வாக்குப்பதிவு மந்தமாகவே காணப்பட்டது. பிறகு மாலை 4 மணி முதல் 6 வரை வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. இதில், ஒட்டன்சத்திரம் கே.ஆா். அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள 190-ஆவது வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் வந்த 35 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் இந்த வாக்குச் சாவடியில் மாலை 6 மணிக்கு மேலும் வாக்குப்பதிவு நீடித்தது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com