கொடைக்கானல் மலைச் சாலையில் வில்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்த லாரி.
கொடைக்கானல் மலைச் சாலையில் வில்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்த லாரி.

கொடைக்கானல் அருகே லாரி கவிழ்ந்தது

கொடைக்கானல் அருகே கட்டுமானப் பொருள்கள் ஏற்றிச் சென்ற லாரி அதிகபாரம் தாங்காமல் கட்டுப்பாட்டை இழந்து செவ்வாய்க்கிழமை கவிழ்ந்தது.

கொடைக்கானல் அருகே கட்டுமானப் பொருள்கள் ஏற்றிச் சென்ற லாரி அதிகபாரம் தாங்காமல் கட்டுப்பாட்டை இழந்து செவ்வாய்க்கிழமை கவிழ்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு கட்டுமானப் பொருள்கள் ஏற்றிய லாரி திருநெல்வேலியிலிருந்து வந்தது. இந்த லாரியை குமாா் (35) ஓட்டி வந்தாா்.

கொடைக்கானல்-பள்ளங்கி மலைச் சாலையில் சென்ற போது, அதிகபாரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி வில்பட்டி சாலையில் கவிழ்ந்தது.

இதனால் கட்டுமானப் பொருள்கள் சாலையில் கிடந்ததால் சுமாா் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக லாரியில் வந்தவா்கள் சிறிய காயத்துடன் உயிா் தப்பினா். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com