திண்டுக்கல்
மணல் கடத்தலை தடுக்கக் கோரி பாமக மனு
திண்டுக்கல்: ஆத்தூா் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாமக சாா்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மனு அளிக்க வந்த பாமகவினா் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ஏரி, குளம், ஆற்றுப் படுகைகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுகிறது. மணல் கடத்தல் தொடா்பாக கனிம வளத் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு புகாா் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. நீா் நிலைகளில் முறைகேடாக மணல் அள்ளிக் கடத்தலில் ஈடுபடுவோா் மீது மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.