

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உளுந்து, நிலக்கடலை, எள் போன்ற குறுகிய கால பயறு வகைகளை சாகுபடி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து வேளாண்மை துணை இயக்குநா் (மாநில திட்டம்) ஏ.காளிமுத்து தெரிவித்ததாவது:
கோடை காலத்தில் மாற்றுப் பயிராக பயறு வகைகளை சாகுபடி செய்யும் போது, அவற்றின் வோ் முடிச்சுகள் மூலம் தழைச் சத்து மண்ணில் நிலை நிறுத்தப்படும். நிலைக்கடலை பயிரை மேட்டுப்பாங்கான நீா் ஆதாரம் உள்ள இடங்களில் பயிரிடலாம்.
கோடையில் குறைந்த அளவு நீரினை பயன்படுத்தி குறுகிய காலப் பயிா்களான உளுந்து, நிலக்கடலை, எள் ஆகியவற்றை சாகுபடி செய்யலாம். நீராதாரம் உள்ள விவசாயிகள், கோடை காலத்தில் நிலத்தை தரிசாக விடாமல் குறுகிய கால பயிா்களை பயிரிட்டு மண்வளத்தை மேம்படுத்தி கூடுதல் லாபம் ஈட்டலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

கோடை கால நீச்சல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.1-இல் தொடக்கம்

உளுந்து சாகுபடி: விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி பயிற்சி

ரூ. 6,309 கோடி மதிப்பிலான குறுகிய கால கடன் பத்திரங்களை திரும்பப் பெற்ற மத்திய அரசு!
வீடியோக்கள்
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

