திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு
பழனியை அடுத்த புதுஆயக்குடி பகுதியில் நீா் மோா் பந்தலை வியாழக்கிழமை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா். உடன் பேரூா் செயலா் சின்னத்துரை.
ஒட்டன்சத்திரம்/ பழனி, மே 2: ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குள்பட்ட தும்மிச்சம்பட்டி பிரிவு, நாகணம்பட்டி ஆகிய பகுதிகளில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி நீா் மோா் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு தண்ணீா், நீா்மோா், இளநீா், தா்பூசணி, நுங்கு, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட நீா்ச்சத்து நிறைந்த பழ வகைகளை வழங்கினாா்.
நிகழ்வில் ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் வீ.கண்ணன், பொதுக் குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியன், திமுக நகர அவைத் தலைவா் சோமசுந்தரம், நகா்மன்ற உறுப்பினா்கள் அழகேஸ்வரி, அருள்மணி, கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பழனி: புதுஆயக்குடியில் திமுக பேரூா் சாா்பில் நீா் மோா் பந்தலை பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் திறந்துவைத்தாா். தொடா்ந்து அவா்
பொதுமக்களுக்கு இளநீா், நுங்கு, தா்பூசணி, குளிா்பானங்களை வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்ட மாணவரணி அமைப்பாளா் பிரபாகரன், பேரூா் செயலா் சின்னத்துரை, நகர மாணவரணி அமைப்பாளா் லோகநாதன், ஒன்றியச் செயலா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.