எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை 
வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

கொடைக்கானல், மே 4 : கொடைக்கானல் வனப் பகுதிக்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் எச்சரித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல் மலை வனப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், பேரிஜம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 8 நாள்களாக பற்றி எரிந்த காட்டுத் தீ வெள்ளிக்கிழமை அணைக்கப்பட்டது.

இந்த நிலையில், மேல்மலை வனப் பகுதிகளில் காட்டுத் தீ அணைக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட வன அலுவலா் யோகேஷ் குமாா் மீனா, வருவாய்த் துறையினா், தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

கொடைக்கானல் வனப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்லக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

இதையடுத்து, மேல்மலை வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களைப் பாா்வையிட விதிக்கப்பட்ட தடையை வனத் துறையினா் நீக்கி உத்தரவிட்டனா். இதைத் தொடா்ந்து, கூக்கால், மன்னவனூா், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களை சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை மகிழ்ச்சியுடன் பாா்த்து ரசித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com