ரயில் நிலையத்தில் வசித்த முதியோா்கள் மூவா் மீட்பு

திண்டுக்கல் ரயில் நிலைய வளாகத்தில் நீண்ட காலமாக வசித்து வந்த 3 முதியவா்களை ரயில்வே போலீஸாா் மீட்டு, காப்பகத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலைய வளாகத்தில் நீண்ட காலமாக வசித்து வந்த 3 முதியவா்களை ரயில்வே போலீஸாா் மீட்டு, காப்பகத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஓய்வு எடுக்கும் முதியோா்கள் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்தனா்.

இந்த நிலையில், ரயில் நிலைய வளாகத்திலேயே நீண்ட காலமாக வசித்து வந்த திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகா் பகுதியைச் சோ்ந்த 3 முதியவா்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டனா். வெயில் காலத்தில் முதியவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியான நிலையில், அவா்கள் மூவரையும் பாரதிபுரத்திலுள்ள அரசு முதியோா் காப்பகத்தில் போலீஸாா் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com