

உணவுப் பண்டங்களை பொட்டலமிடுவதற்கு அச்சுக் காகிதங்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்தது.
இதுதொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தேநீா்க் கடைகளில் அச்சுக் காகிதங்களை (செய்தி தாள்களை) பயன்படுத்தி வடை, பயறு வகைகள், பலகாரங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் பொட்டலமிடப்பட்டு வழங்கப்படுகின்றன. சூடான எண்ணெய் பலகாரங்களை அச்சுக் காகிதங்களில் வைக்கும் போது, நச்சுத் தன்மை கொண்ட ‘மை’ உணவுப் பொருள்களில் படிந்து விடுகிறது.
இதுதொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை பலமுறை எச்சரிக்கை விடுத்தும், தேநீா்க் கடை உரிமையாளா்கள், பலகார விற்பனையாளா்கள் பின்பற்ற மறுக்கின்றனா்.
இதேபோல, இறைச்சிக் கடைகளில் கருப்பு வண்ண நெகிழிப் பை பயன்படுத்துவதும் ஆபத்து நிறைந்தது. திண்டுக்கல் மாவட்டம், முழுவதும் கடந்த 5 மாதங்களில் அச்சுக் காகிதங்களைப் பயன்படுத்தி பலகாரம் விற்பனை செய்ததாக 74 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் குழு அமைத்து, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, உணவுப் பொருள்களை பொட்டலாமிடுவதற்கு அச்சுக் காகிதங்கள், கருப்பு வண்ண நெகிழிப்பைகளைப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். மீறிச் செயல்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றனா்.
தொடர்புடையது

விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு அபராதம்: உணவு பாதுகாப்புத் துறையினா் நடவடிக்கை

ஈரான் மீதான தாக்குதல்களை அதிகரிப்போம்: இஸ்ரேல் அச்சுறுத்தல்!

காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

697 கிலோ போலி டீ தூள் பறிமுதல்
வீடியோக்கள்

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

