அதிமுக பொதுச் செயலராக வி.கே.சசிகலா பொறுப்பேற்றதையடுத்து ராமேசுவரம் பேருந்து நிலையப் பகுதியில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ராமேசுவரம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.அர்ச்சுனன் தலைமையில், நகர் அவைத் தலைவர் இ.பிச்சை, நகர் கழக பொருளாளர் கே.பி.முனியசாமி, அண்ணா தொழிற்சங்கத் தலைவர் அண்ணாத்துரை, நிர்வாகிகள் நல்லு, ராஜேந்திரன், வி.பி.முருகன், நாகேந்திரன், அன்னக்கர்ணன், நாகேந்திரன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
மேலும் அங்கிருந்த பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.