திருவாடானை அருகே கோடனூரைச் சேர்ந்தவர் சத்தியேந்திரன் (35). இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி சிவகாமசுந்தரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சத்தியேந்திரன் குடும்பப் பிரச்னை காரணமாக சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து சிவகாமசுந்தரி அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.