ராமநாதபுரம்
காலமானார் கண்ணகி
கமுதியில், பொந்தம்புளி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கண்ணகி (47) சனிக்கிழமை காலமானார்.
கமுதியில், பொந்தம்புளி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கண்ணகி (47) சனிக்கிழமை காலமானார்.
இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இறந்தார். இவர் முன்னாள் திமுக எம்எல்ஏ எஸ்.காதர்பாட்ஷா என்ற வெள்ளைச்சாமியின் மகள் ஆவார். இவருக்கு கணவர் ரகுபதி, மகள் சம்யுக்தா (17) ஆகியோர் உள்ளனர். கண்ணகியின் உடலுக்கு திருச்சி சிவா எம்பி, திருச்சுழி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் தங்கம்தென்னரசு, ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலர் திவாகரன், முன்னாள் எம்பி பவானிராஜேந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இவரது இறுதிச் சடங்கு சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. தொடர்புக்கு:9952431291.