முதுகுளத்தூரில் அடிப்படை வசதி செய்து தரக் கோரிக்கை

முதுகுளத்தூர் சங்கரபாண்டி ஊரணி 14 ஆவது வார்டு மேற்குத் தெருவில் சுமார் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

முதுகுளத்தூர் சங்கரபாண்டி ஊரணி 14 ஆவது வார்டு மேற்குத் தெருவில் சுமார் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, சாலை வசதிகள் இல்லாததால், வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. தெருவில் போதிய மின் விளக்குகள் இல்லை. காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால், தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சாக்கடை கழிவு நீர் வெளியேற்றுவதற்கு வடிகால் அமைக்கப்படவில்லை. கழிவு நீர் தேங்கி நிற்பதால் அப்குதியில் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
   இது தொடர்பாக பலமுறை பேரூராட்சி அதிகாரிகளிடம் நேரடியாகவும், மனுக்களாகவும் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com