திருவாடானையில் சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆடிப் பூரத் திருக்கல்யாண கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. சிவாச்சாரிகள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றமும், சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 25-ஆம் தேதியும், 28-ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் தேவஸ்தான சரக பொறுப்பாளர் சந்திரசேகர், நிர்வாக செயலாளர் மகேந்திரன் மற்றும் நாட்டார்கள் செய்து வருகின்றனர்.