கோவையில் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைக் கண்டித்து திருவாடானையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துராமு, தாலுகா செயலாளர் குணசேகரன், மாவட்ட குழு உறுப்பினர் நாகநாதன், தாலுகா குழு உறுப்பினர் சந்தானம், சேதுராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.