திருவாடானை பகுதியில் புதர்போல் காட்சியளிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை பழைய மருத்துவமனை வளாகம், கண்மாய், குளங்கள், வரத்து கால்வாய், கோயில் இடங்கள், தனியாருக்கு சொந்தமான இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கிறது. ஆகவே,மாவட்ட நிர்வாகம் உடனடியாக சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.