கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை காவல் சார்பு-ஆய்வாளரைத் தாக்க முயன்றதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கமுதி அடுத்துள்ள மண்டலமாணிக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மண்டலமாணிக்கத்தில் இருந்து கமுதி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த மண்டலமாணிக்கத்தை சேர்ந்த முனியசாமி மகன் முனீஸ்வரன்(27), வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, காவல்சார்பு-ஆய்வாளர் மாணிக்கத்திடம் தகராறுசெய்து தாக்க முயற்சித்தாராம். இதனை அடுத்து சார்பு ஆய்வாளர் மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில்,முனீஸ்வரனைமண்டலமாணிக்கம் போலீஸார் கைது செய்தனர்.