ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச்சேர்ந்த கிளின்டன் மகன் அந்தோணி (எ) பீட்சா (28).மண்படம் கடலில் மீன் சில நாள்களுக்கு முன் மீன் பிடிக்கச் சென்ற இவர் பின்னர் கரைக்கு வரவில்லை.
கடலோர மீனவர்கள் தேடியும்அவரது நிலை தெரியாமல் இருந்தது. இதனால் மண்டபம் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை மாலையில் சாயல்குடி அருகே மூக்கையூர் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒதுங்கி இருந்தது.இது குறித்து கடலோர போலீஸாருக்கு அப்பகுதி மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில் அவர் மண்டபம் பகுதியில் காணாமல் போன மீனவர் அந்தோணி என தெரியவந்தது. மீனவர் சடலத்தை தேவி பட்டினம் கடற்கரை போலீஸார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.