சாயல்குடி அருகே மலட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 டிராக்டர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே மலட்டாற்றில் சிலர் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக சாயல்குடி காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு இருவர் 3 டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கடுகுசந்தை சத்திரத்தைச் சேர்ந்த பூப்பாண்டி மகன் முனீஸ்வரன் (28), ஒச்சதேவன் கோட்டை வேலாயுதம் மகன் நேதாஜி (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை இருவரையும் கைது செய்த போலீஸார், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய 3 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.