பரமக்குடி அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்கிய 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து, 2 பேரை சனிக்கிழமை கைது


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்கிய 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து, 2 பேரை சனிக்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்த சோனை என்பவர் மனைவி மேனகா (34). இவர் பரமக்குடி அருகே காட்டுப்பரமக்குடியில் உள்ள திருவேட்டை அய்யனார் கோயிலுக்கு கும்பிட வந்துள்ளார். கோயிலில் குடும்பத்துடன் சுவாமி கும்பிடும்போது, அங்கு கோயில் அருகே நின்றுகொண்டு சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் பிரேம்குமார் (29), காட்டுப்பரமக்குடியைச் சேர்ந்த சேதுக்கரசு மகன் முத்துக்குமார் (25), குணசேகரன் மகன் சேதுபதி, துரைப்பாண்டி மகன் அஜய், நாகநாதன் மகன் சக்தி ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
இதனை தட்டிக்கேட்ட மேகனாவை 5 பேரும் சேர்ந்து உருட்டு கட்டைகளால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து எமனேசுவரம் காவல் நிலையத்தில் மேனகா அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் 5 பேர் மீதும் வழக்குப்பதிந்து பிரேம்குமார், முத்துக்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com