ராமநாதபுரம்
பள்ளி ஆசிரியை தற்கொலை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்த ஆசிரியை விஷம் அருந்தி செவ்வாய்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்த ஆசிரியை விஷம் அருந்தி செவ்வாய்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
சிவகங்கை மாவட்டம் சாலைகிராமத்தை சேர்ந்த சரவணபாண்டி மகள் பொன்னிரதி(27). இவர் கடந்த 6 மாதமாக கமுதியில் உறவினர் வீட்டில் தங்கி கமுதி கே.என். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் திருமணத் தேதியை பெற்றோர் தள்ளி வைத்துக்கொண்டே வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பொன்னிரதி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த கமுதி காவல்துறையினர் சடலத்தை கமுதி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.