ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் ஜன. 25 ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஜன. 25 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த பொருள்களை பற்றி மட்டுமே விவாதிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். விவசாயம் சார்ந்த கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.