திருவாடானை அருகே உள்ள கூடலூர், நத்தகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன. 22) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாடானை அருகே ஆனந்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான கூடலூர், நத்த கோட்டை, கீழ்பனையூர், மேல்பனையூர், திருத்தேர்வலை, வண்டல், வரவணி, ராதானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயக மூர்த்தி தெரிவித்துள்ளார்.