சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்து முன்னணியினர் சனிக்கிழமை ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
என்.எஸ்.கே. வீதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நிர்வாகி ராஜா சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜகருப்பன், நகர் தலைவர் நம்புவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.