திருவாடானையில் இருந்து அஞ்சுகோட்டை, தினைகாத்தான்வயல், நாச்சியேந்தல், நெய்வயல், அதங்குடி விலக்கு சாலை வழியாக தேவகோட்டைக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.
இதில் நாச்சியேந்தல் கிராமத்தில் இருந்து நெய்வயல் வழியாக அதங்குடி விலக்கு சாலை வரை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு தார்ச் சாலை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது பராமரிப்பின்றி இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளதால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்கக் கோரி இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் செலுத்தி இச்சாலையை சீர்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.