கீழக்கரை மகளிர் கல்லூரியில் மகாகவி பாரதி விழா

கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை மகாகவி பாரதி விழா நடைபெற்றது.


கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை மகாகவி பாரதி விழா நடைபெற்றது.
கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி முதல்வர் சுமையா தாவூத் தலைமை வகித்தார். சீதக்காதி அறக்கட்டளை துணைப் பொதுமேலாளர் ஷேக்தாவூத், ராமநாதபுரம் தமிழ்ச்சங்கச் செயலாளர் பொன்.சந்திரசேகரன், ராமேசுவரம் கோடூர்.ரமணி சாஸ்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் புதுச்சேரி பேராசிரியர் அரிமளம் பத்மநாபன் பாரதி கண்ட புதுமைப்பெண் என்ற தலைப்பிலும், பேராசிரியர் கிருங்கை சேதுபதி பாரதி கண்ட இளைய சமுதாயம் என்ற தலைப்பிலும் பேசினர்.
முன்னதாக கல்லூரி தமிழ்த்துறை தலைவர் வே.அகிலா வரவேற்றார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை ரா.விசாலாட்சி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com