முதுகுளத்தூர் அருகே வளநாடு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் புதன்கிழமை (செப்.19) மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி தலைமையில் நடைபெற உள்ளது.
இதையொட்டி வளநாடு, தேரிருவேலி, செங்கப்படை வருவாய் குரூப்பை சேர்ந்த கிராம மக்கள் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து பயன்பெறலாம் எனவும், முகாமிற்கும் நேரில் வந்து மனு கொடுக்கலாம் எனவும் முதுகுளத்தூர் வட்டாட்சியர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.