ராமநாதபுரம்
பாகம்பிரியாள் திருக்கல்யாணம்
திருவாடானை அருகே திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் சமேத வன்மீகநாதர் கோயில் சித்திரைத் திருவிழாவில்
திருவாடானை அருகே திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் சமேத வன்மீகநாதர் கோயில் சித்திரைத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.
கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. ஒவ்வொரு நாள் இரவும் கேடகம், பல்லக்கு, அன்னம், வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இவ்விழாவில் பெண்கள் கலந்துகொண்டு சுவாமியையும் அம்மனையும் தரிசனம் செய்தனர்.