ராமநாதபுரம் அருகே வாகன விபத்தில் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ராமநாதபுரம் அருகேயுள்ள லாந்தை கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் விஜயன் (33). தனியார் நிறுவன ஊழியரான இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சத்திரக்குடி பகுதியிலிருந்து ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் நண்பருடன் வந்துள்ளார். மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே வந்தபோது, பின்னால் வந்த வாகனம் உரசியபடி சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இரு சக்கர வாகனம் நிலைதடுமாறியதில் விஜயனும், அவரது நண்பரும் சாலையில் விழுந்துள்ளனர். இதில், தலையின் பின்பக்கம் பலத்த காயமடைந்த விஜயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராமநாதபுரம் நகர் போலீஸார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.