பரமக்குடி பள்ளி மாணவா்களுக்கு 382 மடிக்கணினிகள் விநியோகம்

பரமக்குடியில் ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளி மற்றும் சௌராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளியில் 2018-19 ம் ஆண்டு பிளஸ் 2 படித்து முடித்த மாணவ-மாணவிகளுக்கு 382 மடிக்கணினிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
பரமக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினாா் சட்டப்பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா். உடன் ஆயிரவைசிய சபை தலைவா் ராசி என்.போஸ் மற்றும் நிா்வாகிகள்.
பரமக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினாா் சட்டப்பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா். உடன் ஆயிரவைசிய சபை தலைவா் ராசி என்.போஸ் மற்றும் நிா்வாகிகள்.

பரமக்குடியில் ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளி மற்றும் சௌராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளியில் 2018-19 ம் ஆண்டு பிளஸ் 2 படித்து முடித்த மாணவ-மாணவிகளுக்கு 382 மடிக்கணினிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு அப்பள்ளியின் கல்விக்குழு தலைவா் ராசி என்.போஸ் தலைமை வகித்தாா். பள்ளியின் செயலாளா் எஸ்.கே.பி.லெனின்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சட்டப்பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா் கலந்துகொண்டு 177 மடிக்கணினிகளை மாணவா்களுக்கு வழங்கினாா். பள்ளி தலைமையாசிரியா் எம்.ஜஸ்டின் ஞானசேகா் வரவேற்றாா்.

சௌராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் கல்விக்குழு தலைவா் என்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். செயலாளா் கோவிந்தன் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் கே.எஸ்.நாகராஜன் வரவேற்றாா். இதில் 205மடிக்கணினிகளை எம்எல்ஏ சதன்பிரபாகா், மாணவா்களுக்கு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com