தேவகோட்டையில் வட்டாரக்கல்வி அலுலகம் முன் ஜாக்டோ, ஜியோ அமைப்பின் சார்பில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் ஆரம்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியை கண்டித்தும் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்துக்கு அழகப்பன், அதிசயராஜ், நாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.