ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் டி.இ.எல்.சி உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு எஸ்.கே.எஃப். கிளப் சார்பில் கைப்பந்து போட்டிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றன.
இப் போட்டிக்கு மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம், இளையாங்குடி, பரமக்குடி உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து 36 அணிகள் கலந்து கொண்டன.
இதில் ராமநாதபுரம் எஃப்.பி. ஃப்ரண்ட்ஸ் அணியினர் முதல் பரிசையும், முதுகுளத்தூர் எஸ்.கே.எஃப். கிளப் அணியினர் இரண்டாம் பரிசையும், கீழக்கரை ஜே.வி.சி அணியினர் மூன்றாம் பரிசையும், வாலிநோக்கம் மதி ஃப்ரண்ட்ஸ் கிளப் அணியினர் நான்காவது பரிசையும், பரமக்குடி ஆர்.எஸ்.வி.பி.சிஅணியினர் 5 ஆவது பரிசையும் பெற்றனர்.
ஏற்பாடுகளை எஸ்.கே.எஃப். பாய்ஸ் கிளப் அணியினர் செய்திருந்தனர்.