கமுதியில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

கமுதியில் புதிய வட்டாட்சியராக பா.கல்யாணக்குமார் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். 

கமுதியில் புதிய வட்டாட்சியராக பா.கல்யாணக்குமார் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். 
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக மாவட்டப் பணியிட மாறுதல் வருவாய்த் துறையினருக்கு அளிக்கப்பட்டது. ஆனால், வருவாய்த் துறையினர் நடத்திய பல்வேறு கட்ட போராட்டத்தின் காரணமாக, மாறுதல் உத்தரவை ரத்து செய்து, ஒரு சில வட்டாட்சியர்களை தவிர பெரும்பாலான வட்டாட்சியர்களை மீண்டும் அதே பணியிடத்தில் மாவட்ட நிர்வாகம் பணியாற்ற உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், கமுதி வட்டாட்சியராகப் பணியாற்றிய சிக்கந்தர் பபிதா, கீழக்கரை வட்டாட்சியராகப் பணியிட மாறுதலில் சென்றார். இவருக்குப் பதிலாக, ராமநாதபுரம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராகப் பணியாற்றிய பா. கல்யாணக்குமார் திங்கள்கிழமை கமுதி வட்டாட்சியராகப் பொறுப்பேற்றுக்  கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com