பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்கள் 4 பேர் கைது
கமுதியில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்கள் 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கமுதி கண்ணார்பட்டியைச் சேர்ந்தவரும், தற்போது மதுரை முனியாண்டிபுரத்தில் வசிப்பவருமான நாகன் மனைவி விஜயசாந்தி (26). இவர், தனது கணவர் நாகன், உறவினர் மகாலட்சுமி உள்பட தனது குடும்பத்தினருடன், குலதெய்வம் கோயிலுக்கு சென்று விட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கண்ணார்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, கமுதி மீனாட்சி நகர் நல்லுமுருகன், கணேஷ்பாண்டி, ஆதிபராசக்தி நகர் சூர்யா, செந்தனேந்தல் செல்வக்குமார் ஆகியோர், விஜயசாந்தியை கேலி செய்து, தகாத வார்த்தைகளால் பேசி, தவறாக நடக்க முயன்றுள்ளனர்.
இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விஜயசாந்தி அளித்த புகாரின்பேரில், கமுதி காவல் ஆய்வாளர் முத்துக்குமார், வழக்குப்பதிந்து நல்லுமுருகன், கணேஷ்பாண்டி, சூர்யா, செல்வகுமார் ஆகியோரை பாலியல் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்தார்.