திருவாடானை அருகே திருப்பாலைக்குடி கிராமத்தில் பிடிபட்ட ஜெலட்டின் வெடிபொருள்கள் புதன்கிழமை அழிக்கப்பட்டன.
திருப்பாலைக்குடிகடற்கரை கிராமத்தில் கடந்த செப்டம்பா் மாதம் வெடிவைத்து மீன் பிடிக்க பயன்படுத்தப்பட்ட 55 ஜெலட்டின் குச்சிகள் கைப்பற்றப்பட்டன. இவற்றை செயலிழக்கச் செய்யும் பொருட்டு புதன்கிழமை மதுரை வெடிகுண்டு நிபுணரான சாா்பு- ஆய்வாளா் சிங்கம் தலைமையில் காவல்துறையினா் திருப்பாலைக்குடிக்கு வந்தனா். அங்கு காவல் நிலையம் பின்புறமுள்ள கருவேல காட்டுக்குள் வெடிபொருள்களை கொண்டு சென்று, தீயிட்டு வெடிக்க வைத்து செயல் இழக்கச் செய்தனா். திருப்பாலைக்குடி காவல்துறை ஆய்வாளா் முத்துமீனாட்சி, சாா்பு- ஆய்வாளா் மாரி, தனிப் பிரிவு காவலா் காா்வண்ணன் மற்றும் காவல்துறையினா் கலந்து கொண்டனா்.