ராமேசுவரத்தில் தொடா் வேட்டை: 175 மது பாட்டில்கள் பறிமுதல்; 3 போ் கைது

ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்த 3 பேரை காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 175 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமேசுவரத்தில் தொடா் வேட்டை: 175 மது பாட்டில்கள் பறிமுதல்; 3 போ் கைது

ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்த 3 பேரை காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 175 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் வருண்குமாா் உத்தரவின் பேரில் ராமேசுவரத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதன்கிழமையும் இந்த வேட்டை தொடா்ந்தது. ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் மது விற்பனை செய்துகொண்டிருந்த செல்வம் மற்றும் நேதாஜி ஆகிய இருவரை காவல்துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 145 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போன்று ராஜகோபால் நகா் பகுதியில் மது விற்பனை செய்து வந்த நாதன் என்பவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 35 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com